search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் கைது"

    • சம்பவம் தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் சற்குணத்தை கைது செய்தனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீஸ் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றும் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண் போலீசை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்குமாறும், அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தான் அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

    தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் அழைத்து செல்வதாக கூறியதால், கொரடாச்சேரிக்கு பஸ் வந்ததும் பெண் போலீஸ் பஸ்சில் இருந்து இறங்கி சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது சற்குணம், பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ், சற்குணத்திடம் இருந்து தப்பிச்சென்று அவருடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம், அந்த பெண் போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து பெண்ணை துன்புறுத்துதல், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்கொடுத்தல், பெண்ணை தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் கொராடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் சற்குணத்தை கைது செய்தனர்

    • தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குர்ஜாலா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தன. கடைசி நாள் தேர்வு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமியிடம் தாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் நாக பாபு நைசாக பேச்சு கொடுத்தார். சிறுமியை ஏமாற்றி அங்குள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பிடுகுரல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகபாபுவை கைது செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்து மனமுடைந்த நாகபாபுவின் மனைவி அனுஷா விஷம் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவை மீட்டு தாகேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    பிரபாகரன் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.

    அதில் எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் பிரபாகரனை கைது செய்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர்.

    தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் போக்சோ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    அப்போது விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

    விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

    • பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.
    • ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மகன் மாரியப்பன்(வயது 26). இவர் மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    மாரியப்பன் கடையம் பகுதியை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

    அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரியப்பன் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் பெண்ணின் பெற்றோரிடம் போய் திருமணத்திற்கு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறொருவருடன் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த மாரியப்பன் நேற்று இரவு தன்னுடன் பட்டாலியனில் பணிபுரியும் சக போலீஸ்காரர் மற்றும் தனது நண்பர்களான கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களுடன் சேர்ந்து ஒரு காரில் சென்றுள்ளார்.

    அப்போது பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் அந்த இளம்பெண்ணை காரில் ஏற்ற முயன்றுள்ளார்.

    அதனை தடுக்க வந்த அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இளம்பெண்ணை இழுத்து சென்றுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டுவந்து மாரியப்பனை சுற்றிவளைத்தனர்.

    இதனால் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாரியப்பனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாாரித்தனர். அதில் ஒருதலை காதல் விவகாரத்தில் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, ஆட்கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து சென்றனர்.
    • வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோவை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டிவி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சூலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முருகன் (34), மற்றும் அவருடன் இருந்த பள்ளபாளையத்தை சேர்ந்த பிரதீஸ் (27) ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர் தாசிம், சாருக்கு ஆகியோரிடம் இது திருட்டு டிவி தானே உங்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என அந்தப் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்புக்குள் அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து 2 பேரையும் கட்டி வைத்து தாக்கினர். மேலும் நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என முகவரியை கேட்டு தாசிமுடன் போலீஸ்காரர் முருகன், பிரதீஷ் ஆகியோர் ஒரு காரில் வரதராஜபுரம் வந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 டி.வி.க்கள், கியாஸ் அடுப்பு ரூ.47 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸ்காரர் பறித்து தப்பி சென்றார்.

    இது இதுகுறித்து தாசிம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் முருகன் பிரதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பெண் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரத்தை அடுத்த அருவிக்கரை பகுதியை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையில் போலீஸ்காரராக பணிபுரியும் சாபு பணிக்கர் (48) என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அவர் வீட்டில் நான் தனியாக இருந்த போது என்னை ஆபாச படம் எடுத்தார். அதனை காட்டி என்னை அடிக்கடி மிரட்டி வந்தார்.

    பின்னர் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டி வெளியூர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு லாட்ஜில் தங்க வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த 7 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தற்போது நான் அவரின் பேச்சுக்கு உடன்படவில்லை. இதனால் அவர் எனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் கூறியிருந்தார்.

    இதையடுத்து திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ்காரர் சாபு பணிக்கர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×